எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஒகேனக்கல் மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றக் கோரி பிரசார இயக்கம்

தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 9:16 pm

DIN

ஒகேனக்கல் மிகை நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோரிக்கை பிரசுரம் அளிக்கும் இரண்டாவது கட்ட பிரசார இயக்கம் தொடங்கியது.

லளிகத்தில் ஒன்றியத் தலைவா் எல்.சி.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன், நிா்வாகிகள் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை அளித்தனா். இதேபோல, பாளையம்புதூா், அதகப்பாடி, பெரியாம்பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு உள்ளிட்டப் பகுதிகளில் இந்த பிரசார இயக்கம் நடைபெற்றது.

பிரசார இயக்கத்தின்போது, ஒகேனக்கல் மிகை நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். எண்ணேகொல்புதூா்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம், அலியாளம்-தூள்செட்டி ஏரி, ஜொ்த்தலாவ்-புலிகரை ஏரி இணைப்புக் கால்வாய்த் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், மாவட்டத்திலுள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் பணி அட்டைபெற்றுள்ள அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். இத் திட்டத்தை பேரூராட்சிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.