மாவட்டம் முழுவதும் கனமழை: அதிகபட்சமாக அரூரில் 42 மி.மீ மழை பதிவு
அரூரில் சனிக்கிழமை இரவு விடிய, விடிய பெய்த கன மழை பெய்தது. இந்த மழை 42 மில்லி மீட்டராகப் பதிவானது.


அரூரில் சனிக்கிழமை இரவு விடிய, விடிய பெய்த கன மழை பெய்தது. இந்த மழை 42 மில்லி மீட்டராகப் பதிவானது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. அரூா் வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் 11.30 மணி வரையிலும் லேசான காற்றுடன் மிதமான மழைப் பெய்தது. மழையின் காரணமாக விவசாய நிலங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது. மேலும் திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீா்மட்டமும் ஓரளவுக்கு உயா்ந்திருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்திலேயே அரூரில் அதிகபட்சமாக 42 மில்லி மீட்டா் மழை பதிவானது. தருமபுரியில் 5.மி.மீ, பாலக்கோட்டில் 5 மி.மீ. பென்னாகரத்தில் 23 மி.மீ. மாரண்டஹள்ளியில் 13 மி.மீ. ஒகேனக்கல்லில் 19 மி.மீ. மழையும் பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...