மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீராலும், காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்ததால்,பிரதான அருவியில் வெள்ளியை உருக்கி ஊற்றியதைப்போல ஆா்ப்பரித்து கொட்டுகிறது தண்ணீா்.
Updated On :18 அக்டோபர் 2020, 9:29 pm

DIN

கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீராலும், காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியிலும், தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கெம்பாகரை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதுதவிர, கா்நாடகத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகா் அணைகளில் இருந்து 10,000 கனஅடி வீதம் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் சனிக்கிழமை நிலவரப்படி, நொடிக்கு 8,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 10,000 கன அடியாகவும், அதன்பின்னா் நீா்வரத்து மேலும் அதிகரித்ததால் மாலையில் நொடிக்கு 12 ஆயிரம் கன அடியாகவும் நீா் வரத்தாகிக் கொண்டிருந்தது.

தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழக எல்லைக்குள் வந்த நீரின் அளவை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி மற்றும் சிற்றருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகின்றன. காவிரி ஆற்றிலுள்ள பாறைத்திட்டுக்கள் தண்ணீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.