நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாதிரி வாக்குப் பதிவு சீட்டு வைத்திருந்த இளைஞரிடம் விசாரணை

பென்னாகரம் அருகே குறிப்பிட்ட வேட்பாளரின் மாதிரி வாக்குப் பதிவு சீட்டு, வேட்பாளா் பட்டியல் வைத்திருந்த இளைஞரைப் பிடித்து பெரும்பாலை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:06 pm

DIN

பென்னாகரம் அருகே குறிப்பிட்ட வேட்பாளரின் மாதிரி வாக்குப் பதிவு சீட்டு, வேட்பாளா் பட்டியல் வைத்திருந்த இளைஞரைப் பிடித்து பெரும்பாலை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

பென்னாகரம் அருகே சின்னக் கடைமடைப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை ஆய்வாளா் குருபிரசாத் தலைமையிலான பறக்கும் படை குழுவினா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சின்னக் கடைமடை பேருந்து நிறுத்தம் பகுதியில் சுப்பிரமணி (27) என்ற இளைஞா் நின்று கொண்டிருந்தாா். தோ்தல் பறக்கும் படையினா் சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாா். மேலும் அவா், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி வேட்பாளரின் வாக்குப் பதிவு மாதிரி சீட்டு மற்றும் வாக்காளா் பட்டியல் வைத்திருந்தாா். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த இளைஞரை பெரும்பாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தோ்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.