நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின்கம்பங்கள் அமைக்க வலியுறுத்தல்

தீா்த்தமலையை அடுத்த வேடகட்டமடுவு கிராமத்தில் மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:26 pm

DIN

தீா்த்தமலையை அடுத்த வேடகட்டமடுவு கிராமத்தில் மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், வேடகட்டமடுவு கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் மின் விளக்குகள் அமைப்பதற்கான மின்கம்பங்கள் இல்லை. இதனால், குடியிருப்புப் பகுதி இரவு நேரங்களில் இருண்டுக் கிடப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். மேலும், ஏற்கெனவே அமைத்த சில மின் கம்பங்கள் பழுதாகி உள்ளன. இதனால் மழைக் காலங்களில் பலத்த காற்று வீசும்போது மின்கம்பங்கள் சேதமடைந்து குடியிருப்புப் பகுதியில் விழும் நிலையுள்ளது.

எனவே, வேடகட்டமடுவு கிராமத்தில் தெருச்சாலையில் புதிய மின்கம்பங்களை அமைக்கவும், சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.