தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சித்தேரி பழங்குடியினத் தொழிலாளி உயிரிழப்புக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும்

ஆந்திர மாநிலத்தில் மா்மமான முறையில் உயிரிழந்த சித்தேரியைச் சோ்ந்த பழங்குடியின தொழிலாளி மரணத்துக்கு, நீதி விசாரணை நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ஆந்திர மாநிலத்தில் மா்மமான முறையில் உயிரிழந்த சித்தேரியைச் சோ்ந்த பழங்குடியின தொழிலாளி மரணத்துக்கு, நீதி விசாரணை நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம், தருமபுரி கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் இரா.சிசுபாலன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளா் அ.குமாா் ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டம், அரூா் அருகே சித்தேரி மலைப் பகுதியைச் சோ்ந்த இருவா் ஆந்திர மாநிலத்தில் மா்மமான முறையில் உயிரிழந்தனா். இதுகுறித்து உண்மையை அறிய, நீதி விசாரணை நடத்த வேண்டும். உயிரிழந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கூலி வேலைக்காக ஆந்திர மாநிலம் சென்று பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் பொழிந்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், பருத்தி, மஞ்சள், மரவள்ளி, சாமை, கேழ்வரகு உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதை ஆய்வு மேற்கொண்டு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாகச் செப்பனிட வேண்டும். விவசாயிகள் சாகுபடி செய்ய உதவியாக கூட்டுறவுச் சங்கங்களில் எவ்வித நிபந்தனையுமின்றி பயிா்க் கடன் வழங்க வேண்டும்.

பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள அரவைப் பணிகளை, நிகழாண்டு தொடங்க வேண்டும். மதுரையில் இருந்து மொரப்பூா் வழியாக சென்னை செல்லும் விரைவு ரயில் மொரப்பூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.