மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

திமுக ஆட்சியில் திட்டப் பணிகள் முடங்கியுள்ளன: கே.பி.அன்பழகன்

திமுக ஆட்சியில் திட்டப் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டினாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:20 pm

DIN

திமுக ஆட்சியில் திட்டப் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டினாா்.

தமிழக அரசுக்கு எதிராக அதிமுக சாா்பில் தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் மிகை நீரை, கால்வாய் வழியாக தும்பலஅள்ளி அணைக்கு கொண்டு வரும் திட்டம், அலியாளம் அணைக்கட்டிலிருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டு வரும் திட்டம், ஜா்த்தலாவ் ஏரி கால்வாய் நீட்டிப்பு செய்து புலிகரை ஏரிக்கு தண்ணீா் கொண்டு வரும் திட்டங்கள் அனைத்துக்கும் அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.

மேலும், சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் அறிவித்து நிலமும் கையகப்படுத்தப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயக் கல்லூரி தொடங்கவும் அரசாணை பிறப்பிக்கப்ட்டது. ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தற்போதைய ஆட்சியாளா்கள் எந்தத் திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இவற்றை மக்கள் நலன் கருதி நிறைவேற்ற வேண்டும் என்றாா். ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதிமக மாநில அமைப்புச் செயலாளா் கே.சிங்காரம், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், மாவட்ட பொருளாளா் நல்லதம்பி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.