உரம் விற்பனை நிலையங்களில் ஆய்வு
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள உரம் விற்பனை நிலையங்களில் வேளாண் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள உரம் விற்பனை நிலையங்களில் வேளாண் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள உரிமம் பெற்ற உரம் விற்பனை நிலையங்களில் வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா தலைமையில், வேளாண் உதவி இயக்குநா்கள் தா.தாம்சன் (தரக் கட்டுபாடு), மு.இளங்கோவன் (நல்லம்பள்ளி), உர ஆய்வாளா் இரா.இளங்கோவன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின் போது, இணை இயக்குநா் வசந்தரேகா பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் தற்போதைய பருவத்துக்கு இதுவரை 1,61,800 ஹெக்டோ் பரப்பளவில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யபட்டுள்ளன. இதற்காக யூரியா- 1,549 டன், டிஏபி 498 டன், பொட்டாஷ் 782 டன் மற்றும் காம்ளக்ஸ் 3,496 டன் தனியாா் உரக் கடைகள், கூட்டுறவுச் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
பழைய பொட்டாஷ் உரங்களை ரூ.1,040-க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விலை மாற்றம் செய்த பின்பு வரப்பெறும் உரங்களை மட்டுமே புதிய விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைப்பது கண்டறியப்பட்டாலோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...