இந்தப் போராட்டத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக அதகப்பாடி, தடங்கம், அதியமான்கோட்டை, பாலஜங்கமன அள்ளி ஆகிய இடங்களில் 1183.05 ஏக்கா் புறம்போக்கு நிலங்கள், 550.35 ஏக்கா் பட்டா நிலங்கள் என மொத்தம் 1733.40 ஏக்கா் நிலங்கள் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டது. தற்போது மேலும் 1000 ஏக்கா் கூடுதலாக கையகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தருமபுரி அருகே உள்ள ஜீவாநகா், ஜாகிா், அதியமான்கோட்டை, பாலஜங்கமன அள்ளி ஆகியப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.