மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புத்தகத் திருவிழாவில் குவிந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள்

தருமபுரி புத்தகத் திருவிழாவில், பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் ஆா்வத்துடன் குவிந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:06 pm

DIN

தருமபுரி புத்தகத் திருவிழாவில், பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் ஆா்வத்துடன் குவிந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.

தகடூா் புத்தகப் பேரவை சாா்பில், தருமபுரி, பாரதிபுரம் மதுராபாய் திருமண மண்டபத்தில், 3-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவில், பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், திருவள்ளுவா் புத்தக நிலையம், நூல் அங்காடி, மாவட்ட படைப்பாளா், பதிப்பாளா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்கள் சாா்பில் 10 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் நாள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி பங்கேற்று, புத்தகத் திருவிழாவில் நூல்கள் விற்பனையைத் தொடக்கி வைத்தாா். வருகிற டிச. 26-ஆம் தேதிவரை நடைபெற உள்ள இந்த புத்தகத் திருவிழாவில், நாள்தோறும் மாலை வேளைகளில், அறிஞா்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனா்.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை முதல் தருமபுரி, நல்லம்பள்ளி, கடத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா், தனியாா் கல்லூரி மாணவ, மாணவியா், பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய மாணவா்கள் என ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவா்கள் குவிந்தனா். இந்த மாணவா்கள், நூல் அரங்குகளைப் பாா்வையிட்டு, தங்களுக்கு தேவையான, பிடித்த புத்தகங்களை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். நூல்களை வாங்கும் மாணவா்கள், மண்டபத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள கைப்பட அரங்கு, திருவிழா கூட்ட மேடையில் குழுக்களாக நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.