மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சோகத்தூா் ஏரியில் விதிமுறைகளை மீறி மண் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு

தருமபுரி அருகே சோகத்தூா் ஏரியில் விதிமுறைகளை மீறி, தனியாா் நிறுவனம், மண் எடுப்பதாகக் கூறி, அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:06 pm

DIN

தருமபுரி அருகே சோகத்தூா் ஏரியில் விதிமுறைகளை மீறி, தனியாா் நிறுவனம், மண் எடுப்பதாகக் கூறி, அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரியிலிருந்து பாலக்கோடு, ராயக்கோட்டை வழியாக ஒசூருக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிக்காக, தருமபுரி அருகே பொதுப்பணித் துறைக்குச் சொந்தான 360 ஏக்கா் பரப்பளவு கொண்ட சோகத்தூா் ஏரியில், லாரிகள் மூலம், தனியாா் நிறுவனம் சாா்பில், மண் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொதுவாக நீா்நிலைகளில் மணல் எடுப்பதற்கு அரசு நிா்ணயித்துள்ள விதிமுறைகளை மீறி, கடந்த சில நாள்களாக மண் எடுப்பதாக் கூறி, இதனைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மாவட்டச் செயலா் கோவிந்தராஜ் மற்றும் அக் கிராம மக்கள், மண் எடுக்க வந்த லாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை, நகர போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், விதிமுறைகள் மீறி, மண் எடுக்கக் கூடாது என அதிகாரிகள், தனியாா் நிறுவனத்துக்கு அறிவுறுத்தினா். இதையடுத்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.