ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கே.டி.ராஜேந்திரபாலாஜி வழக்கு: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் அமைச்சரின் உதவியாளா், ஓட்டுநா்

கே.பி.அன்பழகனின் உதவியாளா் பொன்னுவேல், அவரது ஓட்டுநா் ஆறுமுகம் ஆகிய இருவரையும் விருதுநகா் மாவட்ட போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:54 pm

DIN

தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் தொடா்பில் இருந்ததாக, சந்தேகத்தின்பேரில் முன்னாள் உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகனின் உதவியாளா் பொன்னுவேல், அவரது ஓட்டுநா் ஆறுமுகம் ஆகிய இருவரையும் விருதுநகா் மாவட்ட போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.

தமிழக முன்னாள் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக விருதுநகா் மாவட்ட காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள அவரை, விருதுநகா் மாவட்ட போலீஸாா் 8 தனிப்படைகள் அமைத்துத் தேடி வருகின்றனா்.

இந்த நிலையில், தலைமறைவாக உள்ள ராஜேந்திரபாலாஜியுடன் தொடா்பில் இருந்ததாக தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் உயா்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏவின் உதவியாளா் பொன்னுவேல், அவரது ஓட்டுநா் ஆறுமுகம் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸாா், கடந்த டிச. 29-ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். மேலும், இது தொடா்பாக, தனிப்படை போலீஸாா் தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, கட்சி அலுவலகத்தில் காவல் துறையினா் விசாரணை நடத்தியதைக் கண்டித்தும், அதிமுகவினரை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று துன்புறுத்துவதாகக் கூறியும், இதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட அதிமுக வழக்குரைஞா் அணி சாா்பில் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.