தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தீ விபத்து விழிப்புணா்வு முகாம்

அரூரில் தீ விபத்து குறித்த விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:37 pm

DIN

அரூரில் தீ விபத்து குறித்த விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் 32-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, போக்குவரத்து துறை சாா்பில் சாலை விதிகள், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம், கண் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒருபகுதியாக, அரூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் தீ விபத்து நேரிடும் போது ஓட்டுநா்கள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அரூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் மா.பழனிசாமி தலைமையிலான வீரா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். தொடா்ந்து, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதன் அவசியம் உள்ளிட்ட விழிப்புணா்வை அரூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் கே.சிவக்குமாா் ஏற்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.