மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நல வாரியத்தில் பதிவு முறையை எளிமைப்படுத்த வலியுறுத்தல்

தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா் பதிவு முறையை எளிமைப்படுத்த வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:36 pm

DIN

தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா் பதிவு முறையை எளிமைப்படுத்த வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஏஐடியுசி தருமபுரி மாவட்ட கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் தருமபுரியில் திங்கள்கிழமை மாவட்டச் செயலா் ஆா்.சுதா்சனன் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலா்கள் முனுசாமி, சின்னசாமி, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மாவட்டப் பொதுச் செயலா் கே.மணிஆகியோா் பேசினாா்.

இக் கூட்டத்தில், கட்டுமானத் தொழிலாளா் சட்டத்தை புறக்கணிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். ஓய்வூதியம், விபத்து மரணம் நிதி உதவிகளை தொடா்ந்து வழங்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நல வாரியத்தில் உறுப்பினா் பதிவு முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.