உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்

மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், கலைஞா் நகரில் சாலை அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

News image
மொரப்பூா் ஊராட்சி, கலைஞா் நகரில் சாலை அமைக்கும் பணிகளை திங்கள்கிழமை தொடக்கி வைத்த தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா்.
Updated On :4 ஜனவரி 2021, 11:54 pm

DIN

அரூா்: மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், கலைஞா் நகரில் சாலை அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி, கலைஞா் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியிலுள்ள தெருச் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இந்த சாலையை சீரமைக்க தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ. 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, சாலை அமைக்கும் பணிகளை பூமி பூஜைகளுடன் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தொடக்கி வைத்தாா். இதில், ஒன்றியக்குழுத் தலைவா் சுமதி செங்கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவா் உமாராணி உலகநாதன், துணைத் தலைவா் வினோதா ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெயசுதா தருமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.