சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விண்ணப்பித்த அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்

News image
Updated On :7 ஜனவரி 2021, 1:16 am

DIN

விண்ணப்பித்த அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஜி.மாதையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

இதில், தருமபுரி மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கோரி, விண்ணப்பித்த அனைவருக்கும், குடியிருப்புகளை ஒதுக்கித்தர வேண்டும். கறவை மாடுகள், உழவு மாடுகள் வாங்க நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் குடிநீா் வழங்க வேண்டும். தலித், பழங்குடியினா் குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீா், குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.