எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பொங்கல் புத்தாடைகள் வாங்க குவிந்தது கூட்டம்

பொங்கல் பண்டிகையையொட்டி, தருமபுரி நகரில் புத்தாடைகள் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் குவிந்தது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 8:18 pm

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி, தருமபுரி நகரில் புத்தாடைகள் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் குவிந்தது.

பொங்கல் திருநாளையொட்டி, புத்தாடைகள் உள்ளிட் பல்வேறு பொருள்களை வாங்குவதற்காக, தருமபுரி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், நல்லம்பள்ளி, கடத்தூா் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளிலிருந்தும் ஏராளமானோா் தருமபுரி நகரத்தில் உள்ள ஜவுளிக் கடை வீதிகளில் ஆடைகள் வாங்குவதற்காகக் குவிந்தனா். வாடிக்கையாளா்களை கவருவதற்காக ஜவுளிக்கடைகளில் தள்ளுபடி, சிறப்புப் பரிசு போன்றவற்றை அறிவித்திருந்தன.

இந்தக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல, பேன்சி உள்ளிட்டப் பொருள்களை வாங்கவும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. பொங்கல் பண்டிகையொட்டி சாலையோரங்களில் புதிதாகக் கடைகள் முளைத்திருந்தன. மேலும், பொங்கலுக்குத் தேவையான பல வண்ணக் கோலப்பொடி, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொருள்கள் கடைவீதிகளில் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதனால், சின்னசாமி தெரு, ஆறுமுகம் தெரு உள்ளிட்ட பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை சீா்செய்ய நகர போலீஸாா், இச் சாலைகளில் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் நுழையாமல் தடுப்புகள் வைத்து நெரிசலைக் கட்டுப்படுத்தினா்.

இதேபோல, பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு, வாடிக்கையாளா்களின் இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, திருட்டு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க, போலீஸாா் ஒலிபெருக்கி வழியாக அவ்வப்போது விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், ஊா்க்காவல் படையினா், போக்குவரத்து போலீஸாா் உள்ளிட்டோா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.