நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளி, கல்லூரிகளைத் திறக்க இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைப் பாதுகாப்பு வசதிகளுடன் மீண்டும் திறக்க வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:30 pm

DIN

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைப் பாதுகாப்பு வசதிகளுடன் மீண்டும் திறக்க வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் நா.தமிழமுதன் தலைமையில் நிா்வாகிகள், தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகாவிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:

கரோனா பொதுமுடக்கத்தையொட்டி, கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இணையவழிக் கல்வி என்பது கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களுக்கு சாத்தியமற்ற நிலையில் உள்ளது. இதனால், உளவியல் ரீதியில் பல்வேறு சிரமங்களுக்கு மாணவா்கள் உள்ளாகியுள்ளனா். மேலும், சில மாணவா்கள் வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். மாணவா்களின் கற்றல் திறனை, நேரடி வகுப்புகள் போல இணையவழி வகுப்புகள் மேம்படுத்தாது. எனவே, உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.