புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மக்கள் கணினி மையம், நகல் எடுக்கும் கடைகளைத் திறக்க வலியுறுத்தல்

மக்கள் கணினி மையம், நகல் எடுக்கும் (ஜெராக்ஸ்) கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:29 pm

DIN

மக்கள் கணினி மையம், நகல் எடுக்கும் (ஜெராக்ஸ்) கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 14 ஆம் தேதி வரையிலும் அமலில் உள்ளது. இந்த நிலையில், ஜூன் 14 ஆம் தேதிக்கு பிறகு இன்னும் ஒருவார காலம் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தற்போது தருமபுரி மாவட்டத்தில் மளிகை, காய்கறிகள், உணவுப் பொருள்கள், மருந்தகங்கள், கணினி பழுது நீக்கும் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதற்கான கடைகள் காலை 6 முதல் மாலை 5 மணி வரையிலும் திறக்கப்படுகிறது. இதேபோல், அரசு நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு வருவாய், ஜாதி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெறுவதற்காக மக்கள் கணினி மையம், நகல் எடுக்கும் கடைகளின் பயன்பாடுகள் பொதுமக்களுக்குத் தேவைப்படுகிறது. எனவே, ஜூன் 14 ஆம் தேதிக்கு பிறகு அமல்படுத்தப்படும் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தில் மக்கள் கணினி மையம், நகல் எடுக்கும் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.