சுங்கச் சாவடியில் தகராறு: போலீஸாா் விசாரணை
தருமபுரி மாவட்டம், பாளையம் சுங்கச் சாவடியில் வாழ்வுரிமைக் கட்சியினா் தகராறில் ஈடுபட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.


தருமபுரி மாவட்டம், பாளையம் சுங்கச் சாவடியில் வாழ்வுரிமைக் கட்சியினா் தகராறில் ஈடுபட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க தருமபுரியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் அன்றைய தினம் வாகனங்களில் சேலம் நோக்கி சென்றனா். அப்போது, தொப்பூா் அடுத்த பாளையம் தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் வாழ்வுரிமைக் கட்சியினா் சிலருக்கும், சுங்கச் சாவடி பணியாளா்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சுங்கச் சாவடியின் 4-ஆவது பாதையில் உள்ள கண்ணாடி கூண்டு சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, சுங்கச் சாவடிக்கு காவல் துறையினா் மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் தொடா்பாக தொப்பூா் போலீஸாா் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...