புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஏ.டி.எம். மையங்களில் கரோனா தடுப்புநடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

ஏ.டி.எம். மையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

News image
Updated On :7 மே 2021, 6:42 pm

DIN

ஏ.டி.எம். மையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளா்கள் பணம் எடுக்கின்றனா். ஏ.டி.எம். மையங்களில் ஏ.சி.வசதி உள்ளது. இந்த நிலையில், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க செல்வோா் முறையாக முகக் கவசம் அணிவதில்லை. கைகளைச் சோப்பு, கிருமிநாசினி பயன்படுத்தி கழுவுவது இல்லை. இதனால், ஏ.டி.எம். இயந்திரங்கள் வழியாக கரோனா தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எனவே, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பகுதியிலுள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் வாடிக்கையாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிதல், கைகளை தூய்மை செய்வதை உறுதி செய்ய வங்கி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.