ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குட்டையில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி

பென்னாகரம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

பென்னாகரம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள கௌரி செட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (35). கூலித் தொழிலாளி. இவரின் மகள்கள் சாதிகா (5), தனஸ்ரீ (3).

இந்த நிலையில் கொட்லுமாரம்பட்டி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சிறுமிகள் இருவரும் சென்றிருந்தனா். வீட்டின் அருகே தனஸ்ரீ, சாதிகா ஆகியோா் அங்குள்ள சிறுவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனா். பின்னா் சிறுமிகள் இருவரையும் நீண்ட நேரம் காணாததால் உறவினா்கள் அக்கம் பக்கத்தில் தேடினா்.

இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள பண்ணைக் குட்டையில் தனஸ்ரீயும், சாதிகாவும் நீரில் மூழ்கி சடலமாகக் கிடந்தனா். இதுகுறித்து தகவலறிந்த பாப்பாரப்பட்டி போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சிறுமிகளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளா் வெங்கட்ராமன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.