புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருட்டு வழக்கில் தொடா்புடையவா் கைது : 18 சவரன் நகை பறிமுதல்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:18 pm

DIN

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காவல் ஆய்வாளா் லட்சுமணதாஸ் தலைமையில், காவல் துறையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகமான முறையில் வந்த ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இந்த விசாரணையில் அவா் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கொண்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் முத்துக்குமரன் (47) என்பதும், இவா் மீது அரூா், மொரப்பூா், கடத்தூா் காவல் நிலையம் உள்பட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திருட்டு தொடா்புடைய வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 18 பவுன் தங்க நகையை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.