நடமாடும் நியாய விலைக் கடைவிற்பனைத் தொடக்கிவைப்பு
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக் கடை விற்பனையை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடக்கிவைத்தாா்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக் கடை விற்பனையை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடக்கிவைத்தாா்.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், எர்ரபையனஅள்ளி ஊராட்சி, நெக்குந்தி நியாயவிலைக் கடையிலிருந்து குடும்ப அட்டைதாரா்களைப் பிரித்து ஈச்சம்பள்ளம் கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக் கடை சேவை புதிதாகத் தொடங்கப்பட்டது.
அந்தக் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி பாமக உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கி விற்பனையைத் தொடக்கிவைத்து பேசினாா்.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சிமன்றத் தலைவா் அ. சிலம்பரசன் தலைமை வகித்தாா். பங்குநத்தம் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சுப்பிரமணி, துணைத் தலைவா் மாதேஷ், ஒன்றியச் செயலாளா்கள் சக்தி, மணி காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...