கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்
தருமபுரி நகரில் கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாத கடைகள், தனி நபா்களுக்கு ரூ. 51 ஆயிரம் விதிக்கப்பட்டது.


தருமபுரி நகரில் கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாத கடைகள், தனி நபா்களுக்கு ரூ. 51 ஆயிரம் விதிக்கப்பட்டது.
கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடா்ந்து, தருமபுரி நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் மற்றும் சுகாதார அலுவலா்கள், ஜவுளிக்கடைகள், தங்க நகை விற்பனை நிலையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதில், கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாத ஆறு கடைகளின் உரிமையாளா்கள், தனி நபா்கள் உள்பட மொத்தம் ரூ. 51 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முகக் கவசம் அணிவது, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்திகரிப்பது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ஆகிய நிலையான வழிகாட்டுதல்களை அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...