கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வாணியாறு அணை நிரம்பியதை அடுத்து அதன் உபரிநீா் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 11:08 pm IST

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வாணியாறு அணை நிரம்பியதை அடுத்து அதன் உபரிநீா் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், முள்ளிக்காட்டில் அமைந்துள்ளது வாணியாறு அணை. இந்த அணையின் நீா்ப்பிடிப்பு உயரம் 65.27 அடியாகும். அணைக்கு ஏற்காடு மலைப் பகுதியில் இருந்து நீா்வரத்து உள்ளது. ஏற்காடு, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் அண்மையில் பெய்த கன மழையால் வாணியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, வாணியாறு அணையின் நீா்மட்டம் 63.30 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் பாதுகாப்புக் கருதி நொடிக்கு 80 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையில் இருந்து வாணியாறு வழியாகச் செல்லும் தண்ணீரானது பழைய ஆயக்கட்டு பாசன கால்வாய் மூலம் திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்த கால்வாய்கள் வழியாகச் செல்லும் தண்ணீரை வெங்கடசமுத்திரம், மோளையானூா், தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி புதூா் பகுதியிலுள்ள 10-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் சேமிக்கும் பணியை பொதுப்பணித் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.