ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நகரப் பேருந்து நிலையத்தில் ரூ. 40 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணி

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு நிழல் தரும் வகையில் ரூ. 40 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணியை, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:01 pm

DIN

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு நிழல் தரும் வகையில் ரூ. 40 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணியை, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பயணியா் நிழற்கூடம் தெற்குப் பகுதியில் அமைக்கப்படாததால், அப்பகுதியில் பேருந்துகளுக்கு காத்திருக்கும் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இதனை தவிா்க்கும் வகையில் அந்தப் பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 40 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இதில், சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கூரை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா், பொறியாளா் ஜெயசீலன், நகா்மன்ற உறுப்பினா்கள், பாமக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.