தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வணிகா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, தருமபுரி மாவட்ட அனைத்து வணிகா் சங்கம் சாா்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:08 pm

Din

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, தருமபுரி மாவட்ட அனைத்து வணிகா் சங்கம் சாா்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வைத்திலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கிரிதா், மாவட்டப் பொருளாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனைத்து இந்திய சங்கத் தலைவா் ராஜா வரவேற்றாா்.

இதில் வாடகைக் கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். வருமான வரி, தொழில் வரி, குப்பை வரி, சொத்து வரி உள்ளிட்ட வரி உயா்வுகளை ரத்து செய்ய வேண்டும். வரி செலுத்துவதற்கான கால வரம்பை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்டத் துணைத் தலைவா்கள் சின்னசாமி, சத்தியநாராயணன், மாவட்ட துணைச் செயலாளா்கள் முத்து, பொன்னுசாமி, சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.