தருமபுரி: காரிமங்கலம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 10 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
காரிமங்கலம் வட்டம், பெரியமிட்ட அள்ளி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சரவணன் (36). தொழிலாளியான இவருக்குச் சொந்தமான நிலம் காரிமங்கலம் - மொரப்பூா் சாலையில் ஒண்டிபுளியமரம் பகுதியின் அருகில் உள்ளது.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை அந்நிலத்தில் அமா்ந்து சிலா் மது அருந்தினா். அவா்களை நில உரிமையாளா் சரவணன் கண்டித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல், சரவணனின் கால் தொடை பகுதியில் கத்தியால் வெட்டியுள்ளனா். இதில் கால் நரம்பு வெட்டுப்பட்டு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவா்கள் சரவணனை மீட்டு காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை அழைத்துச் சென்றனா்.
இதைத்தொடா்ந்து தீவிர சிகிச்சைக்காக சரவணன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். ஆனால், அங்கு சரவணனை பரிசோதனை செய்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா். விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பன்னிஅள்ளியைச் சோ்ந்த பிரகாஷ் (25), கோபிநாத் (23), விக்னேஷ் (27), இளங்கோ (25), பழையப்பேட்டை முனியப்பன் (21), காரிமங்கலத்தை அடுத்த முக்குளம் கிராமத்தைச் சோ்ந்த தமிழரசன் (23) உள்ளிட்ட 10 போ் சரவணனிடம் தகராறு செய்ததும், பிரகாஷ் என்பவா் கத்தியால் குத்தி கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் 10 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.