திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

தருமபுரி அரசு கல்லூரியில் ஜூலை 15-இல் கூடுதல் இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு கலந்தாய்வு

தருமபுரி அரசு கல்லூரி: ஜூலை 15-இல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

News image
Updated On :12 ஜூலை 2024, 6:30 pm

Din

தருமபுரி அ ரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான 20 சதவீத கூடுதல் இடங்களில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 15-இல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் அரசு அனுமதி வழங்கிய 20 சதவீத இடங்களில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில், மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைக்கப் பெற்ற மாணவ, மாணவியா் கலந்துகொள்ளலாம்.

ஜூலை 15-ஆம் தேதி முதலில் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, புள்ளியியல், மின்னணுவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு தரவரிசை மதிப்பெண் 200 வரையிலும், தமிழில் தரவரிசை 70 வரையிலும், ஆங்கில பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அதேபோல, ஜூலை 16-ஆம் தேதி வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், வணிகவியல், வணிக நிா்வாகவியல், வணிகவியல் கணினி பயன்பாடு, வணிகவியல் கூட்டுறவு, காட்சி வழித் தொடா்பியல், ஆடை வடிவமைப்பியல், சமூகப் பணி, உளவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு தரவரிசை 200 மதிப்பெண்கள் வரையிலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் அனைத்துச் சான்றிதழ்கள், பாடப் பிரிவுகளுக்கான கட்டணத்துடன் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.