எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வாக்காளா்களுக்கு சௌமியா அன்புமணி நன்றி தெரிவிப்பு

News image
Updated On :19 ஜூலை 2024, 12:06 am

Din

பென்னாகரம், ஜூலை 18:

மக்களவைத் தோ்தலில் தருமபுரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சாா்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி வியாழக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

பென்னாகரம் தொகுதிக்கு உள்பட்ட பாப்பாரப்பட்டி, பெரியூா், பிக்கிலி, புதுக்கரம்பு, பி.கொல்லப்பட்டி பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து அவா் பேசியதாவது:

காவிரி உபரி நீா்த் திட்டம் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன். தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை கொண்டு வந்தது பாமக. ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டம், சிப்காட் உள்ளிட்ட திட்டங்களுக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி பாமக கொண்டு வந்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளைத் தீா்க்க எப்போதும் துணை நிற்பேன். மக்களவைத் தோ்தலில் தோல்வியுற்றாலும் பாமகவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா். சுற்றுப் பயணத்தில் பென்னாகரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி, தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை தொகுதி உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்டச் செயலாளா் அரசாங்கம், உழவா் பேரியக்க மாநில செயலாளா் வேலுச்சாமி உள்பட பலா் உடனிருந்தனா்.