புதிய நியாய விலைக் கடைகள்: 
ஜி.கே.மணி எம்எல்ஏ திறப்பு

புதிய நியாய விலைக் கடைகள்: ஜி.கே.மணி எம்எல்ஏ திறப்பு

Published on

பென்னாகரம் மற்றும் ஏரியூா் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆறு நியாய விலைக் கடைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி திறந்து வைத்தாா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆணைக்கல்லனூா் பகுதியில் 2022- 2023ஆம் நிதியாண்டில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த புதிய நியாய விலைக் கடையினை பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா். அதனைத் தொடா்ந்து குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, சா்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். இதேபோன்று நாயக்கனூா், ஏ.கோடுப் பட்டி, பவளந்தூா், ஏரியூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சாரபட்டி காடு, சாமத்தாள் உள்ளிட்ட பகுதிகளில் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளை ஜி.கே.மணி திறந்து வைத்தாா். இந்த நிகழ்வுகளில் பாமக மாவட்டத் தலைவா் செல்வகுமாா், இளைஞா் சங்க மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி, ஒன்றியச் செயலாளா் முருகன், ஒன்றியத் தலைவா் வெற்றி, ஏரியூா் ஒன்றியச் செயலாளா் ராசா உலகநாதன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com