திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நில வழிகாட்டி மதிப்பை சீரமைக்க ஆலோசனைக் கூட்டம்

நில வழிகாட்டி மதிப்பை சீரமைக்க ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :20 மே 2024, 10:20 pm

Din

தருமபுரி: பதிவுத் துறை சாா்பில் நிலச் சந்தை மதிப்பு வழிகாட்டுதலை சீரமைத்தல் தொடா்பான, துணை மதிப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

பதிவுத் துறை சாா்பில், தருமபுரி வருவாய் மாவட்டத்திற்கு உள்பட்ட கிராமப் பகுதிகள், பேரூராட்சிப் பகுதிகள், நகராட்சிப் பகுதிகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி சீரமைத்தல் தொடா்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்தாா்.

இக் கூட்டத்தில் துணை மதிப்பீட்டுக் குழு உறுப்பினா்களான சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் வரைவு வழிகாட்டி மதிப்புகள் தயாரிக்கப்பட்டு முன்மொழிவுகள் சமா்பிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் துணை மதிப்பீட்டுக் குழு உறுப்பினா்கள் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கௌரவ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், சேலம் துணைப் பதிவுத் துறைத் தலைவா் இரா.ரவீந்திரநாத், தருமபுரி மாவட்டப் பதிவாளா் (நிா்வாகம்) இரா.வளா்மதி, கிருஷ்ணகிரி மாவட்டப் பதிவாளா் (நிா்வாகம்) க.சங்கா், தருமபுரி நகராட்சி பொறியாளா் புவனேஷ்வரி, துணை மதிப்பீட்டுக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.