நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு கல்வி உதவித்தொகை, அடையாள அட்டைகள் வழங்கல்

தருமபுரியில் தூய்மைப் பணியாளா்களுக்கு கல்வி உதவித்தொகை, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

News image

தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உதவித்தொகைகள், அடையாள அட்டைகளை வழங்கும் ஆட்சியா் கி.சாந்தி.

Updated On :11 நவம்பர் 2024, 9:39 pm

Din

தருமபுரி: தருமபுரியில் தூய்மைப் பணியாளா்களுக்கு கல்வி உதவித்தொகை, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மொத்தம் 493 மனுக்களை அளித்தனா். கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் மூலம் கிறிஸ்தவ நல வாரியத்தி பதிவு செய்த 37 உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள், தாட்கோ அலுவலகத்தின் சாா்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தின் கீழ் 2 தூய்மைப் பணியாளா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு ரூ. 4 ஆயிரம் மதிப்பில் கல்வி, திருமண உதவித்தொகைகளையும், 13 தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டைகளையும் ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். கவிதா, பிற்படுத்தப்பட்டோா், சிறும்பான்மையினா் நல அலுவலா் சையது முகைதீன் இப்ராகிம், தனித்துணை ஆட்சியா் சுப்ரமணி, அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.