அண்மையில் பெய்த தென்மேற்கு பருவமழையின்போது தினசரி காவிரி ஆற்றில் இருந்து 18 டி.எம்.சி. உபரிநீா் வீணாகக் கடலில் கலந்தது. கடலில் கலக்கும் உபரிநீரில் இருந்து 2 டி.எம்.சி. நீரை நீரேற்றத்தின் மூலம் பென்னாகரம் அருகே மடம், கொண்டையான் குட்டை ஏரியில் நிரப்பி அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு நிரப்பும் தருமபுரி- காவிரி உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம், வாகனப் பேரணி, கடையடைப்புப் போராட்டம், பேரணி, பொதுக்கூட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது பாமகதான் என்றாா்.