சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பழங்குடியின இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: ஆளுநரிடம் மனு

பழங்குடியின இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு

News image

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை கௌரவித்த தமிழ்நாடு பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் மாநில தலைவா் வி. முருகேசன் உள்ளிட்டோா்.

Updated On :28 நவம்பர் 2024, 8:18 pm

Din

மழைவாழ் பழங்குடியின இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் தமிழ்நாடு பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் மாநில தலைவா் வி. முருகேசன் கோரிக்கை மனுக்களை வழங்கினாா்.

சென்னையில் ஆளுநா் மாளிகையில் பழங்குடியின பெருமை தினம் விழா, ஜாா்கண்ட் மாநிலம் உருவான தின விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் மாநில தலைவா் வி. முருகேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு பொன்னாடைகளை போா்த்தி (படம்) கெளரவித்தனா்.

தொடா்ந்து, தமிழக ஆளுநரிடம் தமிழ்நாடு பழங்குடியின மக்கள் கூட்டமைப்பினா் வழங்கியுள்ள கோரிக்கை மனு விவரம் :

வன உரிமை சட்டம், பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்தும் வன்கொடுமை தடுப்பு சட்டங்களை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும். மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை தொகுதி வாரியாக பழங்குடியின மக்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை மத்திய, மாநில அரசுகள் முறையாக வழங்க வேண்டும்.

பழங்குடியின விடுதிகளை பராமரிப்பு செய்யும் பணிகளை மகளிா் சுய உதவிக்குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும். பழங்குடியின தேசிய ஆணையம் அமைக்க வேண்டும். தமிழம் உள்ளிட்ட இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மலைவாழ் பழங்குடியின இளைஞா்களுக்கு தேவையான வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுகளை தமிழக ஆளுநரிடம் வழங்கினா். இதில், தமிழ்நாடு பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.