பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி மனு
தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.


தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஏஐடியுசி பள்ளிக் கல்வி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் மாவட்டச் செயலாளா் செல்வி தலைமையில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தியிடம் அளித்த மனு:
தருமபுரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம். தீபாவளி பண்டிகையைக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களது பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, தீபாவளி பண்டிகைக்குள் எங்களின் 7 மாத நிலுவை ஊதியத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன், பள்ளிக் கல்வி தூய்மை பணியாளா் சங்க மாவட்டத் துணைச் செயலாளா் மாதையன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...