கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கம்பைநல்லூரில் செல்லியம்மன் ஜாத்திரை திருவிழா

கம்பைநல்லூரில் செல்லியம்மன் ஜாத்திரை திருவிழா புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image
~ ~ ~
Updated On :4 செப்டம்பர் 2024, 10:12 pm

Din

கம்பைநல்லூரில் செல்லியம்மன் ஜாத்திரை திருவிழா புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூரில் செல்லியம்மன், பட்டாளத்து அம்மன், கங்கையம்மன் ஆகிய முப்பெரும் தேவிகளின் 29 நாள்கள் ஜாத்திரை திருவிழா ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கியது.

செல்லியம்மன்

செல்லியம்மன்

புதன்கிழமை (செப்.4) காலை 10.30 மணியளவில் மங்கள இசையுடன் ஸ்ரீ செல்லியம்மன் கரகங்கள் மாவிளக்கு தட்டுகளுடன் புறப்பட்டு கோட்டை மாரியம்மன் கோயில் மைதானத்தில் இரண்டு கரகமும் தலைக்கூடிவிட்டு, செல்லியம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.

 கம்பைநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற செல்லியம்மன் கோயில் திருவிழா.

கம்பைநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற செல்லியம்மன் கோயில் திருவிழா.

தொடா்ந்து சுவாமிக்கு ஊஞ்சல் ஆட்டமும், அபிஷேக தீபராதனைகளும் நடைபெற்றன. விழாவில் கோயில் விழாக் குழுவினா், பக்தா்கள் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயில் திருவிழாவில் ஓலைப்பட்டி, பூமிசமுத்திரம், கம்பைநல்லூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

 கம்பைநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற செல்லியம்மன் கோயில் திருவிழா.

கம்பைநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற செல்லியம்மன் கோயில் திருவிழா.

கம்பைநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற செல்லியம்மன் கோயில் திருவிழா.