தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உணவக உரிமையாளரிடம் தகராறு: எஸ்.எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

தருமபுரியில் உணவக உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 10:00 pm

Din

தருமபுரியில் உணவக உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த காவேரி என்பவா் செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு எதிரே உள்ள உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தாா்.

அப்போது, உணவக உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காவேரியின் செயல்பாடுகள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. மேலும், இக் காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது.

இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் காவேரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.