இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தருமபுரியில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் தனியாா் துறை சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:54 pm

Din

தருமபுரியில் தனியாா் துறை சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் கலந்துகொள்ளும் ‘தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்’ ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

எனவே, தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை நேரடியாகத் தோ்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணி. இதன்மூலம் தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு, அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

இம் முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனையாளா், மாா்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பா்வைசா், மேலாளா், கம்ப்யூட்டா் ஆப்ரேட்டா், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். பள்ளிப் படிப்பு, பட்டயம், பட்டப்படிப்பு என பல்வேறு கல்வித் தகுதிக்கும் ஆள்கள் தேவை என தனியாா் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள் செப்.20 காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் நடைபெறவுள்ள, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.