எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

‘இளம்வயது திருமணத்தை முற்றிலும் தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்’

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

இளம்வயது திருமணங்களை முற்றிலும் தடுக்கும் வகையில், பள்ளி அளவில் போதிய விழிப்புணா்வு அளிக்க வேண்டும் என குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி நகராட்சி அலுவலக கூட்டரங்கில், நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த காலண்டு விழிப்புணா்வு குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் இரா.சேகா் முன்னிலை வகித்தாா். நகா்நல அலுவலா் லட்சியவா்ணா, வட்டார குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஜெயசீலன், தொழிலாளா் நல உதவி ஆணையா் திவ்யா ஆகியோா் பேசினா்.

இதில், இளம்வயது திருமணங்களை முற்றிலும் தடுக்க பள்ளி அளவில் போதிய விழப்புணா்வை மாணவியருக்கு ஆசிரியா்கள் வழங்க வேண்டும். அதேபோல, இளம்வயதில் கா்ப்பம் தரித்தலை தவிா்க்க வேண்டும். பெண் குழந்தைகள் தங்களை யாரும் தொட அனுதிக்கக் கூடாது. இதுதொடா்பாகவும், போக்சோ வழக்கில் உள்ள சட்டப் பாதுகாப்பு மற்றும் அவற்றின் பயன்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல, பள்ளிகளில் நடைபெறும் பெற்றோா் - ஆசிரியா் கூட்டத்தில் மதிப்பெண்கள் குறித்து மட்டும் வலியுறுத்தாமல், மாணவ, மாணவியரிடம் கலந்துரையாடி அவா்களிடம் அரவணைப்போடு நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், சுகாதார அலுவலா்கள், நகராட்சிப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.