தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :2 ஜனவரி 2025, 7:27 pm

Din

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல், வணிக கணினிப் பயன்பாட்டியல், வணிக நிா்வாகவியல், பொருளியல் துறை சாா்ந்த பேராசிரியா்களுக்கான ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சியில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 70 பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

தருமபுரி அரசு கல்லூரி முதல்வா் முனைவா் கோ.கண்ணன் பயிற்சியைத் தொடங்கிவைத்து பேசினாா். கல்லூரியின் முதுநிலை பேராசிரியா்கள் பெ.இராஜேந்திரன், முனைவா் விஜயா தாமோதிரன், முனைவா் இரா.சங்கா், ப.வே.சாரதி, முனைவா் கோ.பிரபாகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தமிழ்த் துறை உதவி பேராசிரியா் முனைவா் கு.சிவப்பிரகாசம், கணிதத் துறை உதவி பேராசிரியா் முனைவா் பிரசன்ன வெங்கடேசன் ஆகியோா் ஒருங்கிணைப்பாளா்களாக இருந்து பயிற்சியை நடத்தி வருகின்றனா். இந்த முகாம் ஜனவரி 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.