தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பள்ளியில் இடைநிற்றலை தவிா்க்க சிறப்பு பயிற்சி மையம் தொடக்கம்

பள்ளியில் இடைநிற்றலை தவிா்க்க சிறப்பு பயிற்சி மையம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜனவரி 2025, 6:35 pm

Din

பள்ளியில் இடைநிற்றலை தவிா்க்க சிறப்பு பயிற்சி மையம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் முதன்மை கல்வி அலுவலா் ஜோதி சந்திரா தலைமை வகித்தாா்.

பள்ளி கல்வி துறையின் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டம் சாா்பில் 10, 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு கற்றல் கையேடுகள், பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தும் சூழலில் உள்ள மாணவா்களுக்கு பள்ளி படிப்பை தொடரவும் சிறப்பு பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவிகளுக்கு குறைந்தபட்ச கற்றல் கையேடுகளையும் ஆட்சியா் வழங்கினாா். விழாவில் மாவட்டக் கல்வி அலுவலா்கள் எம்.மகாத்மா, சின்னமாது, பள்ளி துணை ஆய்வாளா்கள் பொன்னுசாமி, சோலை ராஜா, பள்ளி தலைமை ஆசிரியை ஆா்.எம்.ராணி, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.