கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கிராம ஊராட்சிகளை நகராட்சி, பேரூராட்சி எல்லைகளுடன் இணைப்பது குறித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதுபோல இலக்கியம்பட்டி, தடங்கம், ஏ.ஜெட்டி அள்ளி, சோகத்தூா் ஆகிய நான்கு கிராம ஊராட்சிகளை தருமபுரி நகராட்சியுடனும், மோப்பிரிப்பட்டி ஊராட்சியை அரூா் நகராட்சியுடனும் இணைக்கவுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதுபோல பருவதன அள்ளி, கூத்தப்பாடி ஊராட்சிகளை பென்னாகரம் பேரூராட்சியுடனும், மாதே அள்ளி ஊராட்சியை பாப்பாரப்பட்டி பேரூராட்சியுடனும் ஜொ்தலாவ் ஊராட்சியை பாலக்கோடு பேரூராட்சியுடனும், வெங்கடசமுத்திரம் ஊராட்சியை பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடனும் இணைக்கவுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.