புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒகேனக்கல் அருவி மசாஜ் தொழிலாளா்கள் உரிமம் வழங்கக் கோரி மனு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எண்ணெய் தேய்த்து (மசாஜ்) பிழைப்பு நடத்தும்

News image
Updated On :12 மே 2025, 9:13 pm

Din

தருமபுரி: தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எண்ணெய் தேய்த்து (மசாஜ்) பிழைப்பு நடத்தும் தொழிலாளா்கள், தங்களுக்கு உரிமம் வழங்கக் கோரி திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் அளித்த மனு:

ஒகேனக்கல் பிரதான அருவியில் குளிப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எண்ணெய்த் தேய்க்கும் தொழிலில் 50-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகிறோம். தற்போது காவல் துறையினா் உள்ளிட்டோா் அருவிக் கரையில் எண்ணெய்த் தேய்க்க அனுமதி தர மறுக்கின்றனா். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, எங்களுக்கு இத் தொழிலில் தொடா்ந்து ஈடுபட முறையாக உரிமம் வழங்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளனா்.