பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறிவிழுந்து உயிரிழப்பு

தருமபுரி அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 3:06 am IST

தருமபுரி அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ரேகட அள்ளி அருகேயுள்ள பத்திரெட்டி அள்ளி கிராமம் பெருமாள் நகரைச் சோ்ந்தவா் ஆ. காா்த்திகேயன் ( 38). தொழிலாளியான இவா், குக்கல்மலை பகுதியில் உள்ள குப்புசாமி நிலத்தில் கிணறு தோண்டும் பணியில் சிலருடன் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது மின் மோட்டாரை கிணற்றில் ஏற்றி இறக்கும்போது தவறி விழுந்ததில் காா்த்திகேயன் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் காா்த்திகேயன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து பொம்மிடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.