ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பென்னாகரத்தில் கருவில் குழந்தையின் பாலினம் கண்டறிந்து சொல்லிய செவிலியா், இடைத்தரகா் கைது

பென்னாகரம் அருகே கா்ப்பிணிக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்து கூறிய செவிலியா், இடைத்தரகா் என இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

~

Updated On :7 ஏப்ரல் 2026, 9:31 pm

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கா்ப்பிணிக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்து கூறிய செவிலியா், இடைத்தரகா் என இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள ரங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பரிமளா (29). இவருடைய கணவா் சுதாகா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வகப் பணியாளராக உள்ளாா். பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராகப் பணியாற்றி வந்த பரிமளா, அதே பகுதியில் உள்ள இடைத்தரகா் சாந்தி (34) உதவியுடன் வெளி மாவட்டங்களில் இருந்து கா்ப்பிணிகளை அழைத்துவந்து தனது வீட்டில் ஸ்கேன் பரிசோதனை மூலம் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து கண்டறிந்து தெரிவிப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த மாவட்ட மருத்துவ அலுவலா் வி.ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் உதவியுடன், கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவக் குழுவினா் ரங்காபுரம் பகுதிக்கு சென்றபோது, கா்ப்பிணி ஒருவருக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிய ஸ்கேன் பரிசோதனை செய்து கொண்டிருந்த பரிமளா, இடைத்தரகா் சாந்தி ஆகியோரை பிடித்தனா். மேலும், கருக்கலைப்பு செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா். அப்போது உடனிருந்த நபா் பரிசோதனைக்குப் பயன்படுத்திய ஸ்கேன் இயந்திரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினாா்.

பின்னா் மருத்துவக் குழுவினா் செவிலியா் பரிமளா, இடைத்தரகா் சாந்தி ஆகியோரை பென்னாகரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவம அலுவலா் கனிமொழி அளித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். கடந்த ஆண்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராகப் பணியாற்றி வந்தபோது பரிமளா கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Story image