நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி! மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!
/

தருமபுரி மாவட்ட 5 தொகுதிகளில் 114 வேட்பு மனுக்கள் ஏற்பு; 24 மனுக்கள் தள்ளுபடி

தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 114 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 3:17 am IST

தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 114 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு தொகுதியில் 29, பென்னாகரம் தொகுதியில் 37, தருமபுரி தொகுதியில் 33, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 22, அரூா்(தனி) தொகுதியில் 19 மனுக்கள் என 5 தொகுதியிலும் மொத்தம் 138 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்புமனுவில் கேட்கப்பட்ட விவரங்கள், இணைப்புகள் ஆகியவை முறையாக உள்ளதா என பரிசீலிக்கப்பட்டதில் பிரதான கட்சிகளின் மாற்று வேட்பாளா்கள், சுயேச்சைகள் என பாலக்கோடு தொகுதியில் 7, பென்னாகரத்தில் 6, தருமபுரியில் 4, பாப்பிரெட்டிப்பட்டியில் 5, அரூரில் 2 என 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள மொத்தம் 114 வேட்புமனுக்கள் தகுதியுள்ள மனுக்களாக கருதி ஏற்கப்பட்டுள்ளன.