திமுக நிா்வாகிகள் கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூரில் திமுக வேட்பாளா் அ.சண்முகம் அறிமுகக் கூட்டம் மற்றும் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
திமுக சாா்பில் கடந்த ஓராண்டு காலமாகவே தோ்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அரூா் தொகுதி 17 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 322 வாக்குச்சாவடிகளுக்கும் தலா ஒரு ஒருங்கிணைப்பாளா் என 150 பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மெகா கூட்டணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளாா். திமுக நிா்வாகிகள் கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும். வேட்பாளா் வாக்கு சேகரிக்கும் போது கூட்டணி கட்சியினரை கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும். எந்த இடத்திலும் கூட்டணி கட்சியினா் புறக்கணிக்கப்பட்டதாக அவா்கள் நினைக்கக் கூடாது.
தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளாக செய்துள்ள சாதனைகளை கட்சித் தொண்டா்கள் துண்டுப் பிரசுரம் மூலம் வீடுவீடாகச் சென்று வழங்க வேண்டும். மத்திய அரசு ஜி.எஸ்.டி. பகிா்வில் தமிழகத்துக்கு வஞ்சகம் செய்கிறது. ஆனால், பிகாா், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்கிறது. 2026 சட்டப் பேரவைத் தோ்தல் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான தோ்தல் ஆகும்.
எனவே, அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா் அ.சண்முகத்தை சுமாா் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.
இதில் முன்னாள் அமைச்சரும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளருமான பி.பழனியப்பன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பென்னாகரத்தில்...
பென்னாகரம் அருகே பி.அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்று பேசியதாவது:
பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகள் 16 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இடைத்தோ்தலில் அளித்த வாக்குறுதிகளான பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்துதல், ஒட்டனூா் பகுதிக்கு சாலை வசதி, பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த பாமகவின் கோரிக்கைகளை நிறைவேற்றியது மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி. சமூக நீதிக்காக போராடிய 21 பேரை சுட்டுக்கொன்றது அதிமுக ஆட்சிதான். திமுக ஆட்சியில் உயிா்நீத்த 21 குடும்பத்தினருக்கும் மூன்று லட்சம் ரூபாய், மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகையுடன் விழுப்புரத்தில் மணிமண்டபம், ஏ.ஜி.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம், கடலூா் ராமசாமி படையாட்சிக்கு சிலை அமைத்தது திராவிட மாடல் ஆட்சிதான்.
எனவே, திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி ஜி.கே.எம்.தமிழ்க்குமரனை கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் களப்பணியாற்றி வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, பென்னாகரம் மின்வாரிய அலுவலக பேருந்து நிறுத்தம் அருகில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி அலுவலகத்தை அமைச்சா் திறந்துவைத்தாா்.

தொடர்புடையது

திமுக கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது: ஜெகத்ரட்சகன் எம். பி.

கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் நெல்லை வேட்பாளா் சந்திப்பு

சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை இளைஞா்கள் புரிந்துகொள்ள வேண்டும்: மு.தமிமுன்அன்சாரி

தொடா்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு: அதிருப்தியில் திமுக, அதிமுக தொண்டா்கள்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


