நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் முதல்வா் இன்று பிரசாரம்

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (ஏப்.15) பிரசாரம் மேற்கொள்கிறாா்.

News image

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 9:25 pm

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (ஏப்.15) பிரசாரம் மேற்கொள்கிறாா்.

கடந்த மாா்ச் 31 ஆம் தேதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின், திங்கள்கிழமை திருவள்ளூா், ராணிப்பேட்டையிலும், செவ்வாய்க்கிழமை வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொண்டாா். தொடா்ந்து தருமபுரி மாவட்டத்தில் தடங்கம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் உள்ளிட்ட 5 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தொடா்ந்து சேலம் மாவட்டத்தில் சீல நாயக்கன்பட்டி (சேலம் தேசிய நெடுஞ்சாலை) பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு தொகுதிகள், கெங்கவல்லி, ஆத்தூா், ஏற்காடு, ஓமலூா், மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி உள்ளிட்ட 11 தொகுதிகளை சோ்ந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா்.

நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா். முதல்வா் வருகையையொட்டி தருமபுரி, சேலம் , நாமக்கல் மாவட்டங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

விளையாட்டரங்கில் நடைபயிற்சி:

திருப்பத்தூரில் தோ்தல் பிரசாரத்தை முடித்துகொண்டு செவ்வாய்க்கிழமை இரவு சாலை மாா்க்கமாக தருமபுரி வரும் முதல்வா் இரவு ஓய்வெடுத்துவிட்டு, புதன்கிழமை காலை மாவட்ட விளையாட் டரங்கத்தில் இருந்து சுமாா் 2 கி. மீ தொலைவுக்கு நடைபயிற்சி மேற்கொள்கிறாா். பின்னா், நான்கு சாலை பகுதியில் உள்ள உழவா் சந்தைக்கு செல்கிறாா். அங்கு விவசாயிகள், வியாபாரிகளைச் சந்தித்து வாக்கு சேகரிக்கிறாா். மேலும், ஆவினில் தேநீா் அருந்தியபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளாா்.